by Vignesh Perumal on | 2025-07-20 10:40 AM
திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மின்வாரியத்தில் (EB) உதவியாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி, போலி நியமன ஆணை அனுப்பி ரூ.5 லட்சம் மோசடி செய்த நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஜேம்ஸ்ராஜன் என்பவருக்கு, சென்னை ESI மருத்துவமனையில் சமூக சேவகராகப் பணியாற்றும் வைரமணி என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது, வைரமணி, ஜேம்ஸ்ராஜனிடம் மின்வாரியத்தில் உதவியாளர் பணி வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். இதை நம்பிய ஜேம்ஸ்ராஜன், வைரமணியிடம் ரூ.5 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட வைரமணி, ஜேம்ஸ்ராஜனுக்குச் செல்போன் வாட்ஸ்அப் மூலம் ஒரு போலி பணி நியமன ஆணையை அனுப்பியுள்ளார். அந்த ஆணை போலியானது எனத் தெரிந்ததும், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜேம்ஸ்ராஜன், உடனடியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஜேம்ஸ்ராஜன் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. குமரேசன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், வைரமணி இதேபோல சரவணன், மூர்த்தி உள்ளிட்ட பலரிடமும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த மோசடி கும்பலுக்கு வேறு யாரும் உடந்தையாக உள்ளார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற அரசு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், அங்கீகரிக்கப்பட்ட அரசு இணையதளங்கள் அல்லது அறிவிப்புகள் மூலம் மட்டுமே வேலைவாய்ப்பு குறித்த தகவல்களைப் பெற வேண்டும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!