by Vignesh Perumal on | 2025-07-18 11:02 PM
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு DSP முருகன் தலைமையில், சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் நத்தம் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நத்தம், சிறுகுடி ரோடு, கோட்டையூர் பேருந்து நிறுத்தம் அருகே சாக்குப்பையில் வைத்து அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த கோட்டையூரைச் சேர்ந்த முருகேசன் (வயது 28), அழகன் என்பவரின் மகன், என்பவரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.
உடனடியாக முருகேசனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 170 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!