by Vignesh Perumal on | 2025-07-06 09:04 AM
கோவை, கொச்சி புறவழிச்சாலையில் இன்று (ஜூலை 6) அதிகாலை உணவருந்தச் சென்ற தலைமைக் காவலர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டதோடு, அவரது மனைவியின் நகைகளும் பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர ஆயுதப்படையில் தலைமை காவலராகப் பணியாற்றும் சதாசிவம் (42), தனது மனைவி அமுதாவுடன் இன்று அதிகாலை கொச்சி புறவழிச்சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்கு உணவு அருந்தச் சென்றுள்ளார். உணவு அருந்திவிட்டு, அதிகாலை சுமார் 2:30 மணியளவில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சதாசிவம் தனது இருசக்கர வாகனத்தை வெங்கடேசபுரம் பிரிவு அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு, இயற்கை உபாதையைக் கழிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த மூன்று பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல், சதாசிவத்தை திடீரென வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் அவரது கைகள் மற்றும் கால்களில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. சதாசிவம் வலி தாங்க முடியாமல் கீழே விழுந்த நிலையில், அந்தக் கும்பல் அவரது மனைவி அமுதாவை மிரட்டி, அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலி மற்றும் 2 சவரன் மோதிரம் உட்பட சுமார் 7 சவரன் நகைகளைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடிவிட்டது.
சதாசிவம் வலியால் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சதாசிவத்தை உடனடியாக மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலை தற்போது சீராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட மர்மக் கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த கொச்சி புறவழிச்சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு தலைமை காவலரே தனது மனைவியுடன் வெளியே சென்றபோது வழிமறிக்கப்பட்டு, தாக்குதலுக்குள்ளாகி, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பதற்றத்தையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் எனப் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!