by Vignesh Perumal on | 2025-07-04 07:41 PM
"ஜூன் 30 ஆம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாத ரேஷன் அட்டைகள் செல்லாது" என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவி வந்த நிலையில், இது வெறும் வதந்தி என தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான 'தகவல் சரிபார்ப்பகம்' (Fact Check Unit) விளக்கம் அளித்துள்ளது. இத்தகைய செய்திகள் உண்மை இல்லை என்றும், பொதுமக்கள் இவற்றை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தனது விளக்கத்தில் கூறியதாவது: சமூக ஊடகங்களில் பரவி வரும் "ஜூன் 30 ஆம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாத ரேஷன் அட்டைகள் செல்லாது" என்ற தகவல் முற்றிலும் தவறானது மற்றும் இது ஒரு வதந்தியே ஆகும். குடும்ப உறுப்பின ர்களின் கை விரல் ரேகையைப் பதிவு செய்வது அவசியம் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது உண்மை. இது ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும், தகுதியானவர்களுக்கு மட்டுமே அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாகும்.
ஆனால், இந்த விரல் ரேகை பதிவுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட கடைசி தேதியும் (deadline) இதுவரை வரையறுக்கப்படவில்லை. ஜூன் 30 ஆம் தேதி என்பது வதந்திகளால் உருவாக்கப்பட்ட ஒரு தேதியே ஆகும். சமூக ஊடகங்கள் மூலம் வரும் இது போன்ற தகவல்களை பொதுமக்கள் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உண்மைத் தன்மை அறியாத செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்பி அச்சப்படத் தேவையில்லை என்றும், ரேஷன் அட்டை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை அரசு அறிவிப்புகள் மூலமாக மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!