by Vignesh Perumal on | 2025-06-30 02:15 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் அறிவித்துள்ளார். இந்த முகாம்கள் இனிவரும் காலங்களில் குறிப்பிட்ட நாட்களில் மூன்று வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் நடைபெறும்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (வார்டு எண்: 210) ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும். அதேபோல் பழனி அரசு மருத்துவமனை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும். கொடைக்கானல் அரசு மருத்துவமனை ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழக்கிழமைகளில் நடைபெறும்.
மேலும், இந்த முகாம்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தித் தரப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!