by Vignesh Perumal on | 2025-05-10 10:36 AM
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பைபாஸ் அருகே இன்று (10.05.2025) அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களது ஊருக்கு செல்லும் பாதையில் பாலம் அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டதில் இருந்து, அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்லும் வழியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாகவும், இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். குறிப்பாக மழைக்காலங்களில் இப்பகுதி மக்கள் ஊருக்குள் செல்லவும், வெளியிலிருந்து வரவும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக அவர்கள் கூறினர்.
இதன் காரணமாக, பைபாஸ் சாலையில் தங்களது ஊருக்கு செல்லும் பாதையில் ஒரு பாலம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை திடீரென பைபாஸ் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பாலத்தின் அவசியம் குறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
இருப்பினும், பொதுமக்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. பொதுமக்களின் இந்த சாலை மறியல் காரணமாக ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!