by Vignesh Perumal on | 2025-04-07 07:40 PM
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு என பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த விலை உயர்வு இன்று (ஏப்ரல் 7, 2025) முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, மானிய விலையில் வீட்டு உபயோக சிலிண்டர் பெறுபவர்களுக்கு ரூ.803-ல் இருந்து ரூ.853 ஆகவும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறுபவர்களுக்கு ரூ.503-ல் இருந்து ரூ.553 ஆகவும் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த விலை உயர்வு சாமானிய மக்களை மேலும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் சிரமப்பட்டு வரும் மக்கள், இந்த சமையல் எரிவாயு விலை உயர்வால் மேலும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். இதுகுறித்து மத்திய அரசு விரைவில் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்
ஹார்முஸ் ஜலசந்திக்கு பை.... பை .......! ரூட்டை மாற்றிய இந்தியா !!
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?