by Muthukamatchi on | 2025-03-23 06:24 PM
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு
தேனி மாவட்டம், மார்ச் 22-ஆம் தேதி தேவதானப்பட்டி பகுதியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு,
கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களான (செ. நவீன் பாண்டியன், வீ. பாபுக்குமார்,
சி. ஸ்ரீஹரிகுமார், ரா. விக்னேஸ்வரன், சு. திருமேனிநாதன், மு. ஜா.லோகேஸ்வரன், செ. சந்தோஷ் )சார்பாக கிராமப்புற அனுபவ பயிற்சித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்மாணவர்கள் தண்ணீர் சேமிக்கும் முறைகள்,
சொட்டுநீர் பாசனத்தின் முக்கியத்துவம் மற்றும் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் முறை பற்றி கூறினார்கள். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் கழிவு நீரை சுத்தம் செய்யும் செய்முறையை செய்து காட்டினார்கள். இந்நிகழ்ச்சியின் இறுதியில், மாணவர்கள் சார்பாக கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கிராம மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு தீர்வு கூறி, விழிப்புணர்வு நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!