by Vignesh Perumal on | 2025-03-22 02:12 PM
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செயல்பட்டு வரும் முழு நேர கிளை நூலகத்தில் இன்று காலை 11:30 மணி அளவில் நூற்றாண்டு நூலகம் கவிப்பேரரசு அரங்கில் உலக தண்ணீர் தினம் பற்றிய கலந்துரையாடல் மழைபொழிவு, மரம் வளர்ப்பு, இயற்கை வளம் பாதுகாப்பு, தண்ணீர் பயன்பாடு உயிரினங்கள் தண்ணீர் தேவை குறித்து கருத்துக்கள் பரிமாற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் நூற்றாண்டு நூலக வாசகர் வட்டம் & நூலகர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், 2025, உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் " பனிப்பாறை பாதுகாப்பு ". இந்த கருப்பொருள் பனிப்பாறைகளைப் பாதுகாப்பதை வலியுறுத்துகிறது மற்றும் முக்கிய நன்னீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு நீர் பாதுகாப்பை உறுதி செய்யவும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது.
உலக தண்ணீர் தினமான இன்று நாம் அனைவரும் தண்ணீரை தேவைக்கு ஏற்றார் போல் பயன்படுத்தி, உலக நலனுக்காக பாடுபடுவோம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!