by Vignesh Perumal on | 2025-03-19 02:10 PM
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூபாய் 1500 உதவித் தொகையை 3000 ஆக மாற்றக்கோரி உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17ஆம் தேதி காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.
குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையர வளாகத்தில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் மாலையில் போலீசார் இவர்களைக் கைது செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இறக்கி விடுவதும் அங்கிருந்து மறுபடியும் இவர்கள் புறப்பட்டு வந்து போராட்டத்தைத் தொடர்வதுமாக உள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு இடையே இன்று மூன்றாவது நாளாக தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதே நிலையில் போராட்டம் தொடரும் எனில், வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் எங்களுடைய வாக்கினை நாங்கள் ஆயுதமாக பயன்படுத்துவோம் என்பதில் எவ்வித கருத்தும் இல்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!