by Satheesh on | 2025-03-15 09:47 PM
தேனி : பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த ஆண்டு நடைபெறும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, 10ம் வகுப்பில் படிப்பில் பின் தங்கிய 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில், பெற்றோர்களின் அனுமதியுடன் கடந்த 10 நாட்களுக்கு மேலாக எல்லா பாடங்களுக்கும் சுழற்சி முறையில் தினமும் இரண்டு ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். இதனால் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் இப்பணியை அவர்கள் செய்து வருவதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். மாணவர்களும் ஆசிரியர்களுக்கு ஒத்துழைத்து, படிப்பை ஆர்வத்துடனும் கவனத்துடனும் பயின்று வருவதாக கூறுகின்றனர். எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஆசிரியர்களின் ஆர்வத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!