by satheesh on | 2025-03-03 09:24 AM
கன்னியாகுமரி மாவட்டம் ; சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
இலந்தவிளை கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர பாண்டியன் மகன் எஸ்பி விஜய் ஆனந்த் இவர் தன்னை ஒரு வழக்கறிஞராக கூறி கொண்டு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார் இவர் மீது
விபச்சார வழக்குகள் உட்பட 24 குற்ற வழக்குகள்
இருந்தது. இந்நிலையில், விபச்சார வழக்கில் இவரை கன்னியாகுமரி காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறையினர் கைது செய்ய செல்லும்போது காம்பவுண்டு சுவர் தாண்டி குதித்து ஓடியதில் கை உடைந்தது இதில் ஆசாரிப்பள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் இன்று கன்னியாகுமரி காவல்துறையினர் மேற்படி விஜய் ஆனந்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்கைது செய்தனர்.
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் இதன் அடிப்படையில் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!