by admin on | 2025-02-18 09:39 PM
செங்கோட்டையில் சொத்து பிரச்சனையில் அண்ணனை வண்டி ஏற்றி கொலை செய்ய முயற்சித்து விபத்து என்று நாடகமாடிய தம்பி மற்றும் தம்பி மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் புளியரை தெற்குமேடு பாக்யாநகரை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவர்காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது உடன் பிறந்த தம்பி அதே ஊரை சேர்ந்த இருளப்பன் என்பவருக்கும் நடைபாதை பிரச்சனை இருந்து வந்தது. தம்பி இருளப்பன் மற்றும் இவரது மகன் வினோத்குமார் இருவரும் சேர்த்து சுப்பையா பாண்டியனை கொலைசெய்யமுடிவெடுத்து சுப்பையா பாண்டியன் காய்கறி வியாபாரத்திற்காக தனது இரு சக்கர வாகனத்தில் செங்கோட்டை காவல்நிலையஎல்கைக்குட்பட்ட பெரிய பிள்ளை வலசைவழியாக செல்லும் போது அவரை பின் தொடர்ந்து (pickup) வண்டியை ஓட்டி வந்த வினோத்குமார் என்பவர் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார். இது சம்பந்தமாக செங்கோட்டை காவல் ஆய்வாளர் K.S. பாலமுருகன் சம்பவம் இடம் சென்று விசாரித்து அங்குள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்ததில் நடந்த சம்பவம் விபத்து இல்லை கொலை முயற்சி என விசாரணையில் தெரிய வர சம்பவத்தில் ஈடுபட்ட இருளப்பன் மற்றும் அவரது மகன் வினோத்குமார் மற்றும் அவர்கள் பயன்படுத்திய (pickup) வண்டியையும் பிடித்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
நிருபர் பாஸ்கரன் தேனி
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!