by Vignesh Perumal on | 2025-06-19 10:55 AM
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (ஜூன் 20, 2025) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
33/11 KV செந்துறை துணை மின் நிலையத்தில் மின் சாதனங்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், கீழ்க்கண்ட கிராமங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செந்துறை, மதவனாயக்கென்பட்டி, பிள்ளையார்நத்தம், கோட்டைப்பட்டி, கோசுகுறிச்சி, குடகிபட்டி, மங்களபட்டி, மணக்காட்டூர், களத்துபட்டி, மாமரத்துபட்டி, கருத்தணாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் பராமரிப்பு பணிகளால் ஏற்படும் சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ளுமாறும், மின்வாரியத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!