by admin on | 2025-02-11 01:42 PM
திருமுல்லைவாயலில் 1.68 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது.
திருமுல்லைவாயில் சிடிஎச் சாலையை ஒட்டி கணக்கன்குட்டை என்ற நீர்நிலை புறம்போக்கு இருந்தது. இதை 11 தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து இருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
இதன்படி ஆட்சியர் பிரதீப், ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி உத்தரவின்பேரில் கடந்த திங்கள்கிழமை அரசு நிலம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. ஆவடி தாசில்தார் உதயம் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் மேற்பார்வை செய்தனர். திருமுல்லைவாயில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர் . மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி ஆகும்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!