by Vignesh Perumal on | 2025-05-17 12:47 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நகராட்சி அதிகாரிகள் தேசியக் கொடி கம்பங்களை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் பகுதியில் பள்ளி மற்றும் நூலகம் முன்பு தேசியக் கொடி ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கம்பங்களை, நகராட்சி அதிகாரிகள் இன்று (17.05.2025) அகற்றியுள்ளனர். அதிகாரிகள், இவை ஏதோ ஒரு கட்சியின் கொடிக்கம்பம் என்று தவறாக நினைத்து அகற்றியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேசியக் கொடி கம்பங்களை அகற்றியது தேசத்தை அவமதிக்கும் செயல் என்று பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளிடம் முறையிட்டனர். தேசியக் கொடி கம்பங்களை அகற்றியது தவறு என்றும், உடனடியாக மீண்டும் அதே இடத்தில் தேசியக் கொடி கம்பங்களை நிறுவ வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் இந்த தவறுக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்கள் என்றும், அகற்றப்பட்ட தேசியக் கொடி கம்பங்கள் மீண்டும் எப்போது நிறுவப்படும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!