by admin on | 2025-02-04 07:12 AM
திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.15,50,000 மோசடி செய்த வழக்கில் கேரளா வாலிபர் கைது
திண்டுக்கல், R.M.காலனியை சேர்ந்த 30 வயது பெண்ணிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி வாட்ஸ் அப் மூலம் பயிற்சிஅளித்து பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.15,50,000 பணத்தைப் பெற்றுக் கொண்டனர் அதன் பிறகு அந்த பெண் அவர்களின் செல்போனுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை இதைத் தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் அவர்களிடம் புகார்அளித்தா ர். இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் ADSP. தெய்வம் மேற்பார்வையில் சைபர் கிரைம் ஆய்வாளர் விக்டோரியா லூர்துமேரி, தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் லாய்டுசிங் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சென்னையை சேர்ந்த ஜீவா(31) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சமீர்(42) என்பவரை கேரளாவில் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தி படம் நன்றி :
மோகன் கணேஷ் திண்டுக்கல்
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!