by Vignesh Perumal on | 2025-05-16 05:11 PM
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று (16.05.2025) மாவட்ட மைய நூலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, நூலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவை முறையாக இருக்கிறதா என்று பார்வையிட்டார். மேலும், நூலகத்தில் உள்ள புத்தகங்களின் இருப்பு மற்றும் வாசகர்களுக்கு தேவையான புதிய புத்தகங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். அவர்களின் வாசிப்பு பழக்கம் மற்றும் நூலகத்தின் தேவைகள் குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட நூலகங்களின் ஆய்வாளர் வள்ளி மற்றும் மாநகராட்சி நகர் நல அலுவலர் ராம்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாவட்ட ஆட்சியரின் இந்த நேரடி ஆய்வு, நூலகத்தின் மேம்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!