by Vignesh Perumal on | 2025-05-16 01:19 PM
திருவண்ணாமலையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) எப்போதும் பாஜகவுடன் தான் இருக்கிறார் என்றும், பிரதமர் மோடியின் இதயத்தில் அவருக்கு தனி இடம் இருக்கிறது என்றும் கூறினார்.
அண்ணாமலை மேலும் கூறுகையில், "ஓ.பி.எஸ். அவர்கள் எப்போதும் எங்களுடன் தான் இருக்கிறார். அவர் பாஜக கூட்டணியில் தான் தொடர்கிறார். பிரதமர் மோடியின் இதயத்தில் அவருக்கு தனி இடம் இருக்கிறது. மேலும், அவர் பாஜகவின் மதிப்புமிக்க தலைவர்" என்று குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக பல செய்திகள் வெளியானது. ஆனால், இதனை அண்ணாமலை மறுத்துள்ளார்.
மேலும், அதிமுக கூட்டணியை விமர்சித்த அண்ணாமலை, அதிமுக உடன் கூட்டணி அமைத்தது ஒரு தவறான முடிவு என்று கூறினார். இந்த சந்திப்பின் போது, திருவண்ணாமலை பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!