by Vignesh Perumal on | 2025-05-14 10:30 AM
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாமக சார்பில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு மாநாட்டிற்குச் சென்றபோது, போலீசாரை தாக்கிய பாமக நிர்வாகிகள் வெங்கடேசன் மற்றும் ராஜா ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாநாட்டிற்குச் சென்ற சில பாமக நிர்வாகிகள், வாகனத்தின் மீது ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களைக் கட்டுப்படுத்த முயன்ற காவலர் ஒருவரை அவர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவலர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பாமக நிர்வாகிகள் வெங்கடேசன் மற்றும் ராஜா ஆகியோர் காவலரை தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். மாநாடுக்குச் சென்றபோது வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!