by Vignesh Perumal on | 2025-05-11 07:04 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை ஆறுமுகம் பிள்ளை தெருச்சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த சாலையின் பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் உருவாகியுள்ளதால், வாகனங்களை இயக்குவது மிகவும் சிரமமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இப்பள்ளங்களில் தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த குண்டும் குழியுமான சாலையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், வாகனங்கள் சேதமடைவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆகவே, பெரியகுளம் தென்கரை ஆறுமுகம் பிள்ளை தெருச்சாலையை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!