by Vignesh Perumal on | 2025-05-06 02:05 PM
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்களின் பெயர் மற்றும் புகைப்படத்தை சிலர் தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாக புகார்கள் வந்துள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அன்பான வேண்டுகோளில், "சில நபர்கள் எனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி வாட்ஸ்அப் குறுந்தகவல்கள், வாட்ஸ்அப் அழைப்புகள் மற்றும் இதர சமூக ஊடகங்கள் வாயிலாக பணம் கேட்டு குறுந்தகவல்கள் அனுப்பி மோசடியில் ஈடுபட முயற்சிகள் நடப்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. எனவே, இதுபோன்று மாவட்ட ஆட்சியர் பெயரை பயன்படுத்தி வரும் எந்தவொரு குறுந்தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இது போன்ற சந்தேகத்திற்கிடமான குறுந்தகவல்கள் அல்லது அழைப்புகள் வந்தால், உடனடியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கோ அல்லது காவல்துறையினருக்கோ தகவல் தெரிவிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் இதுகுறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், யாரையும் நம்பி பணத்தை இழந்துவிட வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் திரு. செ. சரவணன் எச்சரித்துள்ளார்.
இந்த மோசடி முயற்சி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்களது பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், இதுபோன்ற மோசடி நபர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!