by Vignesh Perumal on | 2025-05-06 07:34 AM
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி அஜித் குமாரின் வங்கிக் கணக்கில் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பணம் இருப்பு காட்டப்பட்டுள்ளது. அவரது கணக்கில் மொத்தம் 36 இலக்கங்களுடன் ₹ 1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 இருப்பு இருப்பதாகக் காட்டியுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் அஜித் தனது வங்கிக் கணக்கை சரிபார்த்தபோது தெரியவந்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையை தனது கணக்கில் கண்டதும் அவர் பெரும் குழப்பத்திற்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளானார்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள வங்கி கிளையை கண்காணிக்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த பிழை நேர்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த தவறு சரி செய்யப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இந்த சம்பவம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில், உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு சுமார் ₹ 2,84,17,69,27,10,400 ($389 பில்லியன்) என்று கூறப்படுகிறது. இது வெறும் 14 இலக்கங்கள் மட்டுமே. ஆனால், விவசாயி அஜித்தின் கணக்கில் காட்டப்பட்டுள்ள தொகை 36 இலக்கங்களைக் கொண்டுள்ளது. இது எலான் மஸ்கின் சொத்து மதிப்பை விட பல மடங்கு அதிகமாகும்.
வங்கி அதிகாரிகளின் விளக்கத்தின்படி இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்றாலும், ஒரு சாதாரண விவசாயியின் வங்கிக் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை காட்டப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வினோதமான சம்பவம் சமூக ஊடகங்களிலும் வைரலாக பரவி வருகிறது. விரைவில் வங்கி இந்த பிழையை சரி செய்து அஜித் குமாரின் கணக்கு நிலவரத்தை தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!