by Vignesh Perumal on | 2025-05-05 06:13 PM
சேலம் மாவட்டம் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு அடுத்தடுத்து மூன்று காதல் ஜோடிகள் தஞ்சம் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்த ஜோடிகள், தங்கள் திருமணத்திற்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பலாம் என்ற அச்சத்தில் காவல் நிலையத்தை நாடியுள்ளனர்.
முதல் ஜோடியாக, மேட்டூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும், ஊத்தங்கரையைச் சேர்ந்த கீதா என்பவரும் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரினர். கிருஷ்ணகிரியில் வேலை செய்து வந்தபோது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இரண்டாவதாக, அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த காவலர் விக்னேஷ் என்பவரும், ஸ்வேதா என்பவரும் காவல் நிலையத்திற்கு வந்தனர். இவர்கள் சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா சுயமரியாதை திருமண நிலையத்தில் திருமணம் செய்து கொண்டதாக கூறினர். விக்னேஷ் காவல்துறையைச் சேர்ந்தவர் என்பதால் இந்த சம்பவம் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
மூன்றாவதாக, பென்னாகரத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவரும், மேட்டூரைச் சேர்ந்த கலைவாணி என்பவரும் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இவர்களும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இவ்வாறு, ஒரே காவல் நிலையத்திற்கு அடுத்தடுத்து மூன்று காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு வந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலைய அதிகாரிகள் இந்த ஜோடிகளின் புகார்களை விசாரித்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு தொடர்வது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!