by Vignesh Perumal on | 2025-05-04 08:36 PM
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இன்றைய (மே 4, 2025) அறிவிப்பின்படி, தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், கடலூர், விழுப்புரம், மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நாளை (மே 5) மற்றும் நாளை மறுநாள் (மே 6) ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கனமழையின் போது பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து வருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு பை.... பை .......! ரூட்டை மாற்றிய இந்தியா !!
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?