by admin on | 2025-01-31 10:33 AM
கன்னியாகுமரி : நாகர்கோவில் கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் சண்டைநடந்த நிலையில், நேற்று, ஆசாரிபள்ளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெசிமேனகா கல்லூரிக்கு சென்று மாணவர்கள் மத்தியில் உடையாடினார். அப்போது பேசிய அவர் மாணவர்கள் ஒழுக்கத்தோடு நடக்க வேண்டும் என்றும் ,
மேலும், இளைஞர்கள் நன்றாக படித்து, எந்த வித போதை பழக்கங்களுக்கும் அடிமையாகமல், நல்லிணக்கத்துடன், நல்ல வேலைக்கு செல்லசெல்ல வேண்டும் எனவும், குடும்பத்தை பார்க்க வேண்டும். உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார் மேலும், இளைஞர்கள் யாரும் போதைப் பொருட்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும் போதை பொருளுக்கு அடிமையாகாமல் வாழ்க்கையில் நல்ல பாதைகளை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் போதை பொருட்கள் பயன்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய போது
இது மாதிரியான சம்பவம் நடக்காத வண்ணம் இருக்க வேண்டும் மீறி நடந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவர்கள் மத்தியில் தெரிவித்தார்.
நிருபர் சதீஷ்குமார் தேனி
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!