by Vignesh Perumal on | 2025-04-07 11:52 AM
இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். அதாவது,"இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்பகளை எடுத்துள்ளது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது: "தங்கச்சி மடம் பகுகுதியில் ரூ. 150 கோடியில் மீன் பிடி துறைமுகம். 7,000 பேருக்கு கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம். 15,300 மீனவர்களுக்கு மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்ய பயிற்சி வழங்குதல். காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதலுக்காக 14,000 பயனாளிகளுக்கு ரூ. 53 கோடியில் பயிற்சி வழங்கப்படும். இந்த திட்டங்களை கண்காணிக்க, ஒருங்கிணைக்க திட்ட கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படும்".
அதைத்தொடர்ந்து, "கட்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் என இலங்கை செல்லும் பிரதமர் மோடிக்கு, இது குறித்து அந்நாட்டு அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மான நிறைவேற்றி இருந்தோம். ஆனால் இது குறித்து அவர் பேசியதாக பெரிதளவில் செய்தி இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு பை.... பை .......! ரூட்டை மாற்றிய இந்தியா !!
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?