by Muthukamatchi on | 2025-04-07 09:04 AM
சென்னையில் இன்று (ஏப்ரல் 7, 2025) அமலாக்கத் துறையினர் 10 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகள், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த சோதனைகள் சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனைகள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தொடர்பானதாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. குறிப்பாக அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், TVH கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு பை.... பை .......! ரூட்டை மாற்றிய இந்தியா !!
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?