by Vignesh Perumal on | 2025-04-06 08:29 PM
பத்திரிகையாளர் மன்றத்திற்கு நிதி ஒதுக்கீடு தொடர்பான தகவல்களை துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் இன்று (ஏப்ரல் 6, 2025) அறிவித்தார். சென்னை பத்திரிகையாளர் மன்ற உட்கட்டமைப்பு வசதிக்காக தமிழக அரசு ₹2.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக பத்திரிகையாளர் நல நிதிக்காக வழங்கப்பட்டு வந்த ₹5 லட்சம் உதவித்தொகை ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு ₹2 கோடியே 40 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பத்திரிகையாளர்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் செய்தியாளர் அங்கீகார அட்டை போன்ற பல நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் தகவல்கள் மூலம், பத்திரிகையாளர் மன்றம் மற்றும் பத்திரிகையாளர் நலனுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருவது தெரிய வருகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு பை.... பை .......! ரூட்டை மாற்றிய இந்தியா !!
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?