by Vignesh Perumal on | 2025-04-05 05:31 PM
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு துறை சார்ந்தோர், அத்துரைக்கான தேவையை நிபந்தனையாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் ஏற்கனவே, தமிழ்நாடு முதலமைச்சர் மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இன்னிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், இது தொடர்பாக சட்டப்பேரவையில், சட்டத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், சட்டக் கல்லூரி மாணவர் சேர்க்கையை சட்ட இயக்குனரகம் மூலமாக நடத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!