by satheesh on | 2026-03-14 02:43 PM
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு அருகே வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக மரங்களை அளித்துவிட்டு தனிநபர் அதிகாரிகள் ஆதரவோடு சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு சாலை அமைத்துள்ளதாக சமூக அலுவலர்கள் புகார். பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த வலாங்குளம் பகுதி பெரும்பள்ளம். வனதுறைக்கு கட்டுப்பட்ட பகுதி ஆகும் வருகின்றன. இப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தங்களது நிலங்களுக்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லாததால், சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்றே விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பட்டா நிலமாக இருந்தாலும் அங்கு விவசாயம் செய்ய வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கோபால் என்பவருடைய மகன் சசி என்பவர் தனது நிலத்தின் ஒரு பகுதியை மதுரை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். வனத்துறையின் ஆதரவோடு வனப்பகுதியில் அனுமதி இல்லாமல் கனரக வாகனங்களை பயன்படுத்தி பாறைகளை உடைத்து சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்களைச் சாய்த்து சாலை அமைத்து உள்ளனர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா வனத்துறையினர் ? தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சட்டவிரோதமாக அனுமதி இன்றி மரம் வெட்டி கடத்தப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை மௌனம் காப்பதாக சமூக ஆர்வலர்கள், வன ஆர்வலர்கள மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!