by satheesh on | 2026-06-17 04:56 PM
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பத்மநாபபுரம் அரண்மனையை அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ். ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசியாவிலேயே முழுமையாக மரத்தால் கட்டப்பட்ட அரண்மனையாக விளங்கும் பத்மநாபபுரம் அரண்மனை பல நூற்றாண்டுகளாக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் நிலையில், போதிய பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் அதன் பொலிவு குறைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கோரிக்கை மனுவை கேரள முதலமைச்சர் வி.டி. சதீசனை நேரில் சந்தித்து ஆர்.எஸ். ராஜன் வழங்கினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரண்மனையை பாதுகாக்க கேரள அரசு உடனடியாக நிதி ஒதுக்கி, பழமைத் தன்மையை பாதிக்காமல் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"